தமிழ் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட இயக்குநர் பாக்யராஜ், சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். வழக்கம்போல் நடைபயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், பூர்ணிமா, சாந்தனு, சரண்யா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர். பின்னர், அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
பாக்யராஜுக்குத் தனது வாழ்நாளில் இருந்த ஒரே பெரிய கவலை, தன்னைப்போலவே தன் மகன் சாந்தனுவையும் சினிமாவில் ஒரு பெரிய நட்சத்திரமாக மாற்ற முடியவில்லையே என்பதுதான். இதனை சாந்தனுவும் சில மேடைகளில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது. முன்பு ஒருமுறை பாக்யராஜ் இயக்கத்தில் ‘வேட்டிய மடிச்சுக் கட்டு’ படத்தில் ரஜினிகாந்திடம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டபோது, சில காரணங்களால் ரஜினி அதை மறுத்திருந்தார். பின்னர் ஒரு மேடையில், பாக்யராஜ் கேட்டபோது தான் நடித்திருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் வருத்தமும் தெரிவித்திருந்தார்.
தற்போது அந்தப் பழைய பேட்டி வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், பாக்யராஜுக்குச் செய்யும் நன்றிக்கடனாக ரஜினிகாந்த் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதாவது, ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஒரு நல்ல, திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய கதாபாத்திரத்தை அவர் தர வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் மட்டுமே பாக்யராஜின் ஆன்மா சாந்தியடையும் என்றும் ரசிகர்கள் தங்களது விருப்பங்களை உருக்கமாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
