கண்ணீர் வரவைக்கும் வீடியோ: இறுதிச்சடங்கு செய்யக்கூட யாரும் வரல… கண்ணீரோடு தாயின் சடலத்தை சுமந்து சென்ற தலீத் சிறுமிகள்..!!

By Soundarya on தை 30, 2026

Spread the love
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், சாதியக் பாகுபாட்டின் கோர முகத்தையும் வறுமையின் கொடுமையையும் ஒருசேர வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த இரண்டு சிறுமிகள், தங்கள் தாயின் மறைவுக்குப் பிறகு  இறுதிச் சடங்குகளைச் செய்ய உறவினர்களோ அல்லது கிராம மக்களோ வராத நிலையில், தனித்து நின்று அந்தப் பணிகளைச் செய்துள்ளனர். கடந்த ஆண்டே தந்தையை இழந்த அந்தச் சிறுமிகள், ஆதரவற்ற நிலையில் தங்கள் தாயின் உடலை அடக்கம் செய்யக் கூட வழியின்றி தவித்தது சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.

மிகவும் வறுமையான சூழலில் இருந்த அந்தச் சிறுமிகள், இறுதிச் சடங்கிற்கான செலவுகளுக்குக் கூட பணமின்றி கிராம மக்களிடமும் அரசாங்கத்திடமும் உதவி கோர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். சாதிய ரீதியான புறக்கணிப்பு ஒருபுறம் இருக்க, அடிப்படை மனிதநேயம் கூட மறுக்கப்பட்ட இந்த நிகழ்வு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கடைக்கோடி மனிதர்களைச் சென்றடைவதில் உள்ள இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது.