பெங்களூருவை உலுக்கிய அஷிதா கொலை வழக்கு… உல்லாசத்திற்கு மறுத்ததால் நேர்ந்த பயங்கரம்… அந்த வீட்டில் நடந்தது என்ன…?

By SATHISH R on ஆனி 28, 2026

Spread the love

பெங்களூரு புறநகர் பகுதியான ஜிகினியில், கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் அஷிதா என்ற பெண் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஷிதாவிற்கு, ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஜிகினியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தபோது, அங்கு பணிபுரிந்த 28 வயதான நானே சாகேப் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த கள்ளக்காதல் விவகாரத்தால், கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் அஷிதா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின், இருவரும் பாதாளம்மா லே-அவுட் பகுதியில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அங்கேயும் தங்களது தனிமை வாழ்க்கையை அவர்கள் தொடர்ந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

   

இந்நிலையில், கடந்த ஜூன் 20-ந் தேதியன்று நானே சாகேப் அஷிதாவை உல்லாசத்திற்கு அழைத்தபோது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நானே சாகேப், அஷிதாவை கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

   

சில நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜிகினி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்த போலீசாருக்கு, அஷிதாவின் உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது அதிர்ச்சியை அளித்தது. உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளி நானே சாகேப்பை தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.