அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான மோதல் போக்கைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அந்நாட்டிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானிடம் ஒரு நியாயமான மற்றும் நேர்மையான ஒப்பந்தத்தை முன்வைக்க உள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், அதனை ஈரான் ஏற்க மறுத்தால் அந்நாட்டின் அனைத்து மின் நிலையங்களையும், பாலங்களையும் அமெரிக்க ராணுவம் தகர்த்து எறியும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே ஈரானின் பல இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இந்த இறுதி வாய்ப்பை ஈரான் தவறவிடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்காகத் தனது சிறப்புப் பிரதிநிதிகள் குழுவை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார். அங்கு நடைபெறவுள்ள இறுதி கட்டப் பேச்சுவார்த்தையே ஈரானுக்கான கடைசி வாய்ப்பு என்றும், அதற்குப் பிறகு எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமிருக்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ள சூழலில், இந்தச் சந்திப்பு உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
