சென்னையில் வேகமாக நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளைத் முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை ரயிலில் பயணித்த அவர், நந்தனத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து கத்திப்பாரா பகுதி இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளையும் பார்வையிட்டார். ஆய்வின்போது, ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் முன்னேற்றங்களைப் பாராட்டியதுடன், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் பகல் நேரப் பணிகளுக்குப் பதிலாக இரவு நேரங்களில் கூடுதல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ பாதைக்கான அனைத்துப் பாதுகாப்பு பரிசோதனைகளும் நிறைவடைந்து மே மாதத்திலேயே அனுமதி பெறப்பட்டுள்ளதால், பணிகள் முடிவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படவுள்ளது. 10 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, அலுவலகம் மற்றும் பள்ளிச் செல்லும் பொதுமக்களின் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்.
