மரண பீதியில் ஈரான்: “யாரும் அங்கே போகாதீங்க” இந்தியர்களுக்கு மத்திய அரசு போட்ட அதிரடி தடை உத்தரவு..!

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

ஈரான் தற்போது தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், அங்கு நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியர்கள் யாரும் அந்நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) அறிவுறுத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈரானில் நிலவும் சூழல் இன்னும் முழுமையாக சீரடையாததால், ஏற்கனவே அங்கு இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அங்குள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ள மத்திய அரசு, பிராந்தியத்தில் அமைதி திரும்பும் வரை வான்வழிப் பயணங்களில் இருக்கும் இடர்பாடுகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.