ஷாக்..! தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து… நள்ளிரவு 1 மணிக்கு கள்ள ஓட்டு போட்ட திமுகவினர்… அதிர்ச்சியில் தவெகவினர்…!!

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், திமுகவினர் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கள்ள ஓட்டு போட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேட்டிற்கு அங்கிருந்த காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுவது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடு குறித்துத் தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் உடனடியாக அந்த வாக்குச்சாவடிக்குள் சென்று தட்டிக்கேட்க முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீசார் தவெக நிர்வாகிகளை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி, அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியே விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதுடன், தேர்தல் நேர்மை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.