டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவின் பீட்டா-2 காவல் எல்லைக்குட்பட்ட செக்டார் சாய்-3 பகுதியில் ஒரு நெஞ்சை பதறவைக்கும் விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள சாலையில் சிறுவர்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு பிக்-அப் லாரியின் ஓட்டுநருக்கு அலைபேசி அழைப்பு வந்துள்ளது. அலைபேசியில் பேசியபடியே கவனக்குறைவாக இருந்த ஓட்டுநர், வாகனத்திற்கு முன்னால் குழந்தை விளையாடுவதைக் கவனிக்காமல் திடீரென லாரியை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டியுள்ளார். இதில் அந்தப் பிஞ்சு குழந்தை லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி நசுங்கியது.
#GreaterNoida 🚨⚠️
Disturbing Visuals 🚨
1. Kid playing on the Road ahead of Bolero Pickup.
2. Bolero Pickup Driver Busy on #Phone, runsover Kid. Kid injured.Phone Distractions adding up max misadventures in India. Drivers should pay attention around + should focus on the… pic.twitter.com/u1Jg3JIEmD
— Dave (Road Safety: City & Highways) (@motordave2) December 18, 2025
