‘யார் அதிகமா குடிக்கிறது’… போதையில் வந்த வெறி… நண்பனை சேற்றிலேயே அமுக்கிக் கொன்ற கொடூரம்…!

Spread the love

காஞ்சிபுரம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், நண்பனை ஏரிச் சேற்றில் அமுக்கிக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரும், காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அருள்மணி என்பவரும் நெருங்கிய நண்பர்கள். மது அருந்தும் பழக்கம் கொண்ட இவர்கள் இருவருக்குள்ளும் அந்தப் பழக்கத்தின் மூலமாகவே நட்பு ஏற்பட்டு, அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இருவரும் காஞ்சிபுரம் அருகே உள்ள காரை ஊராட்சியில் அமைந்துள்ள சேமந்தாங்கள் ஏரிப் பகுதிக்குச் சென்று ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, மதுவை யார் வாங்கித் தருவது மற்றும் யார் அதிக அளவில் குடிப்பது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் வெடித்துள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் இந்தத் தகராறு முற்றவே, ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

இதில் கடும் ஆத்திரமடைந்த அருள்மணி, போதையில் நிலைதடுமாறி நின்ற மணிகண்டனை பலவந்தமாக இழுத்துச் சென்று ஏரிச் சேற்றில் அமுக்கியுள்ளார். சேற்றில் இருந்து தப்பிக்க முடியாமல் மூச்சுத்திணறிய மணிகண்டன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தனது நண்பன் இறந்துவிட்டதை உணர்ந்த அருள்மணி, பயத்தில் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

இதற்கிடையில், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மணிகண்டன் சடலமாகக் கிடப்பதைக் கண்டு பொன்னேரிக்கரை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தலைமறைவாக இருந்த அருள்மணியை அதிரடியாகக் கைது செய்தனர். மது போதையில் ஏற்பட்ட சிறு தகராறில் நண்பனே நண்பனைக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SATHISH R

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago