“ஐயோ என் செல்ல தங்கச்சி” வீடு முழுவதும் ரத்தம் சிதறிக்கிடக்க.. மாடியில் நிம்மதியாக தூங்கிய அண்ணன்.. போலீசுக்கு வந்த சந்தேகம்… காட்டிக்கொடுத்த டி-ஷார்ட்.. தங்கை கொலையில் வெளிவந்த பகீர் உண்மை..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே உள்ள குண்டர்க்கி பகுதியில், 17 வயது சிறுமி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலைக்குச் சென்றிருந்த பெற்றோர் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, வீடு முழுவதும் ரத்தம் சிதறிக்கிடக்க, தங்களது இளைய மகள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு கதறித் துடித்தனர். இந்தத் துயரமான சூழலில், அந்த வீட்டின் மொட்டை மாடியில் எவ்வித சலனமுமின்றித் தூங்கிக் கொண்டிருந்த மூத்த மகன் விக்கி மீது போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது.

தொடக்கத்தில் போலீசாரிடம் பேசிய விக்கி, யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தனது தங்கையைக் கொன்றுவிட்டதாக ஒரு த்ரில்லர் சினிமா பாணியில் கதை கட்டினார். ஆனால், விக்கி அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இருந்த ரத்தக் கறைகள் உண்மையை உரக்கச் சொன்னன. “தங்கையைக் காப்பாற்ற முயன்றபோது ரத்தம் ஒட்டியது” என அவர் சமாளித்தாலும், தடயவியல் நிபுணர்களின் ஆய்வில் அவர் பொய் சொல்வது உறுதியானது. இறுதியில், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தனது உடன் பிறந்த தங்கையைத் தானே கொலை செய்ததை விக்கி ஒப்புக்கொண்டார்.

கைது செய்யப்பட்ட விக்கியின் பின்னணி குறித்து விசாரித்தபோது அவர் ஒரு குற்றப் பின்னணி கொண்டவர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே பெண்கள் தொடர்பான புகார்கள் மற்றும் அடிதடி வழக்குகளில் மூன்று முறை சிறை சென்றவர் என்பதும், தீபாவளி பண்டிகையின் போதுதான் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் அம்பலமானது. ஐந்து உடன்பிறந்தவர்களில் மிகவும் செல்லமான கடைக்குட்டித் தங்கையை, பாதுகாப்பாக இருக்க வேண்டிய அண்ணனே வெறித்தனமாகக் கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது விக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“அரசு மருத்துவமனையில் தவெக திடீர் ஆய்வு… யாருடைய அனுமதியுடன் இந்த அத்துமீறல்?… கொந்தளிக்கும் திமுக ஐடி விங்”..!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள்…

8 minutes ago

BREAKING: 10-ம் வகுப்பு ரிசல்ட்.. மாணவி தற்கொலை..!!

சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவி சலினியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

17 minutes ago

“தமிழகத்தில் மாதந்தோறும் இபி பில்லிங்?.. 200 யூனிட் ‘இலவச மின்சாரம்’ கிடைக்குமா?… மின்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி”…!!!

தமிழகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகே…

37 minutes ago

ரூ.57 கோடி பரிசு விழுந்தும் தேடாத நபர்… கடைசி 8 நாட்கள்.. அலமாரியில் காத்திருந்த ட்விஸ்ட்…. கடைசி நேரத்தில் நடந்த அதிசயம்….!

அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டு, கடைசி நேரத்தில் பழைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீட்டின் மூலம் ரூ.57 கோடி…

49 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுகவில் இணைய துடித்த ஆதவ் அர்ஜுனா?.. EPS போட்ட ‘ஸ்கெட்ச்’… ரகசிய உடைத்த ஓ.எஸ்.மணியன்..!

அதிமுகவில் இணைவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

58 minutes ago

“தவெக எம்எல்ஏ-வால் பெண் எஸ்பி-க்கு மிரட்டலா?”…. ஈரோட்டில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு பின்னணி… சற்றுமுன் வெளியான உண்மை…!

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிய எம்எல்ஏ-வாகப் பொறுப்பேற்றுள்ள…

1 மணத்தியாலம் ago