கர்நாடக மாநிலம் தார்வாட்டில் ஜகியா முல்லா என்ற பாரா மெடிக்கல் மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, புதர்க்காட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். வேலை தேடிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், மாணவியின் உறவினரும் காதலனுமான சாபிர் முல்லா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து ஜகியாவின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
கொலை செய்த பிறகு எதுவுமே தெரியாதது போல காவல்துறையினருடன் சேர்ந்து தேடுவது போலவும், பெற்றோருடன் ஆறுதல் சொல்வது போலவும் சாபிர் நாடகமாடியது அனைவரையும் அதிரவைத்துள்ளது. செல்போன் சிக்னல் மற்றும் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் அவர் சிக்கிக்கொண்டார்.
இந்தக் கொடூரச் செயலில் சாபிரின் நண்பர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், காதலனே மாணவியைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒரு குரங்கு, மூன்று மாதக் குழந்தையைத் தனது குட்டி என நினைத்து நீண்ட நேரம்…
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…