வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவன், பள்ளிக்குச் செல்ல வழக்கமான மிதிவண்டி அல்லது பிற வாகனங்களைப் பயன்படுத்தாமல், ஒரு பெரிய ஆட்டின் மீது அமர்ந்து பயணம் செய்யும் வினோதமான வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து, தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
பள்ளி சீருடை அணிந்து, முதுகில் பள்ளிப் பையை மாட்டிக்கொண்டு அந்த சிறுவன் முழு நம்பிக்கையுடனும், மிக எளிதாகவும் ஆட்டின் மீது அமர்ந்து சவாரி செய்கிறான். மேலும், ஆட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக கையில் ஒரு சிறிய குச்சியையும் வைத்துள்ளான். இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் ஆடம்பர வாகனங்களில் பள்ளிக்குச் செல்லும் நிலையில், இந்த சிறுவனின் கிராமத்து எளிய சவாரி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் விஷால் மாளவி என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இந்த சிறுவனின் மழலை மாறா முகபாவனையையும், அவனது அசாத்திய சவாரியையும் பாராட்டி, “இதுபோன்ற எளிய மற்றும் அழகான தருணங்கள் தான் சமூக ஊடகங்களை மகிழ்ச்சியான இடமாக மாற்றுகின்றன” என்று தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…