ஐசிஐசிஐ வங்கியின் ரீஜினல் மேலாளர் ஒருவர் தனது ஊழியரைச் சக ஊழியர்கள் முன்னிலையில் கொடூரமாக அவமானப்படுத்தும் காணொளி மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த மேலாளர் ஊழியரைப் பார்த்து, “கடந்த 15 நாட்களில் நீ என்ன வேலை செய்திருக்கிறாய்? பயனில்லாதவன்” என்பது போலப் பேசியுள்ளார். மேலும் வேலை செய்யாமல் வந்து வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டார். வேலை செய்ய விரும்பவில்லை என்றால் ராஜினாமா செய்யுமாறு கூறப்பட்டார். மிகவும் இழிவான முறையில் வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம், தனியார் வங்கிகளில் நிலவும் Toxic work culture மற்றும் ஊழியர்கள் மீதான கடுமையான பணிச்சுமை குறித்த விவாதங்களைத் மீண்டும் கிளப்பியுள்ளது. பல ஊழியர் குழுக்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள், இது போன்ற நடத்தை பணியிடத் துன்புறுத்தலின் உச்சக்கட்டம் என்று விமர்சித்துள்ளனர். இந்தக் காணொளி வெளியான பிறகு, பல நெட்டிசன்கள் ரிசர்வ் வங்கி மற்றும் தொழிலாளர் அமைச்சகம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகளுக்குத் தங்கள் கோபத்தைத் தெரிவித்து, வங்கி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
பெரும் சர்ச்சைக்குப் பிறகு, இந்த விவகாரம் குறித்து ஐசிஐசிஐ வங்கி விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இது ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல, பிற தனியார் வங்கிகளிலும் இதுபோன்ற பணிச்சுமை மற்றும் ஊழியர்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் நடப்பதாகப் பல முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…