டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு இழைத்த கொடூரமான சித்திரவதை குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், குற்றவாளி ராகுல் (என்கிற ராஜு) மற்றும் அவனது கூட்டாளிகள் நடத்திய அராஜகத்தை கண்ணீருடன் விவரித்துள்ளார்.
“என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராகுல் வீட்டிற்குள் புகுந்தான். அவன் என்னைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், மிக மோசமாகத் தாக்கினான்” என்று அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்தப் பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து, பலமுறை சித்திரவதை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பிச் சென்ற அதே கும்பல்தான் டெல்லிக்கு வந்து ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் மகளைக் கொலை செய்துவிட்டு, அங்கேயும் மற்றொரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தத் தொடர் குற்றச் செயல்கள் அந்தக் கும்பலின் மிருகத்தனமான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
