“கார் வரும், அட்ஜஸ்ட் பண்ணு…” ஒரு மணி நேரத்திற்கு 20 லட்சம்… சித்தியின் ஆசை வார்த்தை… இளம்பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில், பணத்தாசைக்காக சொந்த அக்கா மகளையே ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற சித்தியின் கொடூர செயல் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள துல்லஹ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது தாயாரின் சகோதரியான புஷ்பா தேவி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரும் இணைந்து கடந்த சில நாட்களாகக் குறிவைத்துள்ளனர்.

அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறிய புஷ்பா தேவி, “நாங்கள் சொல்லும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்தால் மொத்தம் 80 லட்சம் ரூபாய் கிடைக்கும்; அதில் உனக்கு நேரடியாக 20 லட்சம் ரூபாய் தருவோம், மீதித் தொகையை வேலை வாங்கித் தந்ததற்காக நானும் அந்த வாலிபரும் எடுத்துக்கொள்வோம்” எனக் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து வீட்டில் உள்ள யாரிடமும் மூச்சுவிடக் கூடாது என்றும் அந்த இளம்பெண்ணை அவர்கள் மிரட்டி ரகசியமாக வைத்துள்ளனர்.

ஒரே ஒரு வேலைக்கு 20 லட்சம் ரூபாய் கிடைப்பதாகக் கூறியதால் சந்தேகமடைந்த அந்த இளம்பெண், அது என்ன வேலை என்று தன் சித்தியிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டுள்ளார். அதற்கு புஷ்பா தேவி, “உன்னை அழைத்துச் செல்ல ஒரு கார் வரும், அதில் ஏறி பக்கத்து மாவட்டமான அசம்காருக்குச் சென்று அங்கு ஒரு மணி நேரம் மட்டும் அட்ஜஸ்ட் செய்துவிட்டு வந்தால் போதும்” எனக் கூறி, அங்கு ஆபாசமான செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற தனது வஞ்சகமான திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த இளம்பெண் உடனடியாக அந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த புஷ்பா தேவியின் கூட்டாளியான வாலிபர், இளம்பெண்ணைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த இளம்பெண், உடனடியாகத் தன் பெற்றோரிடம் விபரத்தைக் கூறி, அவர்களின் உதவியுடன் துல்லஹ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தலைமறைவாக உள்ள சித்தி மற்றும் அந்த வாலிபரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்

SATHISH R

Recent Posts

செங்கடலில் வெடித்த பேரதிர்ச்சி…! சவூதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பின் ஏவுகணை தாக்குதல்…! சவூதி அரேபியாவுக்கு விழுந்த மெகா அடி…!!

செங்கடலில் சவூதி அரேபிய துறைமுகங்களுக்குச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை மீறியதாகக் கூறி, 'என்சீலியா' மற்றும் 'லைலா'…

6 minutes ago

“இது வெறும் டிரைலர் தான்.. இனிமேதான் மெயின் பிக்சர் இருக்கு”… மத்திய அரசுக்கு கரப்பான் பூச்சி ஜனதா பரபரப்பு எச்சரிக்கை…!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்…

10 minutes ago

“என்ன விட்டுரு மா…” அலறி துடித்த மாமியார்…!! கத்தியால் குத்தி தரதரவென இழுத்து வந்த மருமகள்…. பதற வைக்கும் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் சிகல்குடா பகுதியில் உள்ள எருகள வஸ்தி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக விஜயலட்சுமி என்ற பெண்…

15 minutes ago

BREAKING: காலையிலேயே ஷாக் நியூஸ்… உச்சம் தொட்ட தங்கம்… இனி அவ்ளோதான்… ரூ.1,08,000-ஐ தாண்டிய தங்கம் விலை…!

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, உள்நாட்டிலும் அதன் விலை இன்று (ஜூலை 23) அதிரடியாக…

18 minutes ago

ரூ. 100 கோடி கோயில் நிலம் வெறும் 2 கோடிக்கு விற்பனையா?… பழனியில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்… அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்பு…!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை…

56 minutes ago

“ஐயோ.. எங்க போய் சொல்ல”…. “உலகத்துலயே இப்படி ஒரு அமைச்சரா?”…. தலையில அடித்துக் கொண்ட நயினார் நாகேந்திரன்… ப்ரஸ் மீட்டில் கலகல…!

சமீபத்தில் வெளியான நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தைக் காண்பதற்காக, முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் விக்னேஷ் 3 மணி நேரம் பணி…

1 மணத்தியாலம் ago