சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி அருகே மது போதையில் ஏற்பட்ட சிறு தகராறு கொலையில் முடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றபோது, சரித்திர பதிவேடு குற்றவாளியான சதீஷ்குமார் தலைமையிலான கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. போதையில் இருந்த அந்த கும்பல், லோகநாதனையும் அவரது நண்பர்களையும் வலுக்கட்டாயமாகத் தோப்புக்கரணம் போடுமாறு கூறி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் லோகநாதனை கத்தியால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். பின்னர் அவரது உடலைக் கண்மாயில் வீசிவிட்டு காரில் தப்பியோடினர். தகவலறிந்து வந்த திருமயம் போலீசார், லோகநாதனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…