“சொந்த பாட்டி, அத்தை செய்த மாந்திரீக பயங்கரம்?.. அமாவாசை நள்ளிரவில் 6 வயது பேரனுக்கு நேர்ந்த கொடூரம்… வேலூரை உலுக்கிய நரபலி சம்பவம்.”.!!

Spread the love

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் – ஆஷா தம்பதியினருக்கு முகிலன் என்ற 6 வயது மகன் இருந்துள்ளான். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த 4 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்த நிலையில், முகிலன் தனது தாய்வழிப் பாட்டி விஜயாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தான். கடந்த இரண்டு மாதங்களாக ராஜேஷும் ஆஷாவும் மீண்டும் சேர்ந்து திருப்பூரில் வாழத் தொடங்கியதைத் தொடர்ந்து, சிறுவன் முகிலனை அவனது தந்தை வழிப் பாட்டி விஜயாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கடந்த 40 நாட்களாக முகிலன் வளர்ந்து வந்த நிலையில், இன்று திடீரென சிறுவன் உயிரிழந்துவிட்டதாகக் கூறி அவனது உடலை வைக்க வீட்டிற்குப் பிரீசர் பாக்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.

சிறுவன் முகிலனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களும் ஊர் மக்களும் கொடுத்த தகவலின் பேரில், மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிறுவனின் உடலில் காயங்களும், தலை நசுங்கிய அடையாளங்களும் இருந்ததாக அவனது தாய்வழிப் பாட்டி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறுவன் சுவர் மீது ஏறி கீழே விழுந்து இறந்ததாகக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்றும், அவனை அடித்துக் கொலை செய்துள்ளனர் என்றும் கூறி அவர்கள் மேல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே, தந்தை வழிப் பாட்டி விஜயா மற்றும் அவளது மூத்த மகள் ரேவதி ஆகியோர் நீண்ட நாட்களாக மாந்திரீகம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். அவர்களது வீடு முழுவதும் மாந்திரீகப் பொருட்கள் இருந்ததாகவும், அமாவாசையான நேற்று இந்த 6 வயது சிறுவனை அவர்கள் நரபலி கொடுத்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய ரேவதியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்டி மற்றும் சொந்த அத்தையாலேயே 6 வயது சிறுவன் மாந்திரீகத்திற்காகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

4 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

5 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago