தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் பாமாயில் என உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஏராளமான குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றன. இதில் வயது மூத்தவர்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களால் ரேஷன் கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனை கருதி தமிழக அரசு சார்பாக தாயுமானவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஜனவரி மாதத்திற்கான உணவுப்பொருட்கள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இன்று ஜனவரி 4, நாளை ஜனவரி 5 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 21 லட்சம் பேருக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. வழக்கமாக, மாதத்தின் 2-வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பணிகள் நடைபெறும். பொங்கலையொட்டி இம்முறை முன்கூட்டியே பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே "நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா?" என்ற கோஷ்டி மோதலில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக…