திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த தஞ்சை பார்த்திபன், திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். கட்சியை ஒரு மார்க்கெட் போல மாற்றி, உதயநிதி வியாபாரம் நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திமுக அதிகாரத்தில் இருக்கும் சிலரின் சாதிய அரசியல் காரணமாகவே தனக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காமல் போனது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி மாவட்டச் செயலாளர் (மா.செ.) பதவி பறிக்கப்பட்ட அண்ணாதுரை என்பவருக்கு, பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு, உதயநிதிக்கு தெரிந்தே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சை பார்த்திபன் சாடியுள்ளார். திமுகவில் நிலவும் இத்தகைய முறைகேடுகள் மற்றும் சாதியப் போக்குகள் காரணமாகவே தான் கட்சியை விட்டு விலக நேரிட்டது என்ற பரபரப்பு பின்னணியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
