தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் இறுதி படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பிரம்மாண்டமான பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்புக்காக பாடல் காட்சியின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்ட நடத்தப்பட்டது. அதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரின் காம்பினேஷன் காட்சிகளை எடுக்க இயக்குனர் வினோத் திட்டமிட்டு இருந்தார். தளபதியின் கடைசி படமாக உருவாகி வரும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகின்றது. நடிகர் விஜயின் தளபதி 69 திரைப்படம் கடந்த மாத ஐந்தாம் தேதி பூஜை உடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. அதற்கு அடுத்த நாடு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தளபதி 69 படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 69 படம் பாலையாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது.
ஆனால் அப்படி கிடையாது என்று படக்குனு கூறிய நிலையில் அது உண்மை தான் போல. அதாவது பையனூரில் செட் போடப்பட்டுள்ளதாம். அதை பார்க்கும்போது அப்படியே பகவந்த் கேசரி பட செட் மாதிரியே உள்ளதாம். மேலும் பாலையாவின் படத்தில் ஸ்ரீலீலாவை கடத்திட்டு செல்வார்கள் அதை பாலையா லாரியில் போய் காப்பாற்றுவார்.

#image_title
அதேபோல் தளபதி 69 படத்தில் மமீதா பைஜூவை கடத்திட்டு போவார்களாம். விஜய் பைக்கில் சென்று துரத்துவாராம். விஜய் கடைசியாக சினிமாவை விட்டு போகும்போது ஒரு மசாலா படத்தில் நடித்துவிட்டு ஒரு வசூலை கொடுத்து விட்டு போகலாம் என்று நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது போன்ற படத்தில் நடிப்பதால் விஜய்க்கு எந்த பயனும் இல்லை. புரொடியூசர்களுக்கு தான் வருமானம்.