பாலியல் மற்றும் உடல் பாதுகாப்பு குறித்த நாடு முழுவதும் எழுச்சியுடன் விழிப்புணர்வு எழுப்பும் தருணத்தில் கர்நாடகாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ஸ்ரீ குரு திப்பேஸ்வர சுவாமி கோவிலின் குடியிருப்பு வேத பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக விரேஷ் ஹிரேமட் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒன்பதாம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் தன்னுடைய பாட்டியுடன் தொலைபேசியில் பேச முயன்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. வாக்குவாதம் முடிந்த சில நிமிடத்தில் ஆசிரியர் மாணவரை இழுத்து தரையில் தள்ளியதோடு காலால் உதைத்தும் கைகளால் அடித்தும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மாணவர் பயந்தபடி கதறி அழுது குருஜி என்று மன்னிப்பு கோரிய தருணம் காண்போரை கலங்க வைத்துள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…