புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். செவிலியர் பிரிவு மாணவிகள் மருத்துவமனையில் பயிற்சி பெறச் செல்லும்போது எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றும் டெக்னீஷியன்கள் சரவணன் மற்றும் திவாகர் இருவரும் 10க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தேவையற்ற இடங்களில் தொடுவது, அநாகரிகமாகப் பேசுவது போன்ற பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரியின் உள் புகார் குழுவிடம் மாணவிகள் புகார் அளித்தனர். குழு 60 நாட்களில் விசாரணை நடத்தி ஆவணங்களை நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. ஆனால் நிர்வாகம் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிர்வாகம் டெக்னீஷியன்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் தெரிகிறது. நிர்வாகத்தில் பணியாற்றும் ஜூலி அசோக் என்பவர் “தொட்டு மட்டும் தானே பார்த்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க?” எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நிர்வாகத்துடன் பேச முயன்றபோது அழைப்பு விடுக்கப்பட்டது. பிரச்சனை வெளியே தெரியாமல் நிர்வாகம் பல மாதங்களாக மறைத்து வந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். மாணவர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது என விடுதியைக் காலி செய்யச் சொல்லி, விடுமுறை அளித்து பிரச்சனையைத் திசை திருப்பியதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரு டெக்னீஷியன்களை உடனடியாக பணி நீக்கம் செய்து வழக்குப் பதிவு செய்யக் கோரி 100க்கும் மேற்பட்ட செவிலியர், பிசியோதெரபி உள்ளிட்ட பிரிவு மாணவர்கள் கல்லூரி வளாக வாயிலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா கண்டோன்மெண்ட் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த சிவப்பு நிற…
மகாபூபாபாத் மாவட்டம் தோர்ணக்கல் மண்டலம் சிலுகோடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவருக்கும், சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பவானி என்பவருக்கும்…
சென்னையை அடுத்த கே.கே. நகரில் வசிக்கும் 8 வயது சிறுமி, பெற்றோர் பிரிந்து வாழ்வதால் தனது தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து…
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை இன்று செங்கல்பட்டு குடும்ப நல…
பென்சில்வேனியாவில் சிறுமியை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 37 வயதான நிக்கோலஸ் ஆலன் ஸ்பென்சர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய உட்கட்சி மோதல்கள் அதிமுகவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தல் பின்னடைவுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே காரணம்…