“பள்ளியா? அல்லது பண்ணை வீடா?… அரசு பள்ளி மாணவர்களைத் துப்புரவு பணியாளர்களாக மாற்றிய ஆசிரியர்கள்… வைரலாகும் நேனுவா பள்ளி வீடியோ”…!!!

By Muthu Mani on வைகாசி 7, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள நேனுவா காம்போசிட் பள்ளியில் (Nenua Composite School), பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளைப் பெருக்கி சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி கற்க வேண்டிய வயதில், மாணவர்களைக் கொண்டு துப்புரவுப் பணிகளைச் செய்ய வைப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், பல அரசுப் பள்ளிகளில் இது போன்ற அவலங்கள் தொடர்வதாகப் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், மாணவர்களை வேலை வாங்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தவறைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது உண்மையானப் பிரச்சினையை மூடிமறைக்கும் செயல் என்றும், இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தின் மீது கல்வித் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.