ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில், பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியர் மீது 7 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பெயரில் தலைமை ஆசிரியர் காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் விடுமுறை கடிதம் குடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
ஆகவே போலீசார் ஆசிரியரை வலைவீசித் தேடி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பே சில மாணவிகள் அந்த ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். கல்வி நிர்வாகம் ஆசிரியரை கண்டித்துள்ளனர். அந்த ஆசிரியரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியிலும் பள்ளியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
