உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் கேம்பியர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கணினி பயிற்சி மையத்தில், கூடுதல் வகுப்பு என்ற பெயரில் மாணவியை தனியாக இருக்க வைத்த ஆசிரியர் ஜகதீஷ் சௌராசியா என்பவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். மாணவியை ஆசிரியர் முத்தமிட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் செப்டம்பர் 9-ஆம் தேதி புதன்கிழமை அன்று நடந்துள்ளது. வழக்கமான வகுப்புகள் முடிந்த பிறகும் மாணவி தாமதமாக வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளனர்.
அப்போது, அந்த மாணவியின் சகோதரர் தனது நண்பர்களுடன் உடனடியாக கணினி பயிற்சி மையத்திற்கு நேரில் சென்றுள்ளார். வகுப்பறைக்குள் நுழைந்த சகோதரர், தனது தங்கையை வகுப்பிற்குப் பிறகும் ஏன் தனியாக வைத்திருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி, ஆத்திரத்தில் ஆசிரியரைத் தாக்கியுள்ளார். இந்த மோதலின் போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலானது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்ட மறுத்த ஆசிரியர், அந்த மாணவி தன் சகோதரி போன்றவர் என்றும், ரக்ஷா பந்தன் அன்று தனக்கு ராக்கி கட்டியதால் தான் கூடுதல் வகுப்பு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஜகதீஷ் சௌராசியாவை காவல்துறையினர் கைது செய்து சட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளனர். மேலும், சுமார் 40 மாணவர்கள் பயின்று வரும் அந்த கணினி மையத்தில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக, இணையத்தில் வைரலாகும் காணொளியைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…