பெங்களூருவின் வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளான தனிஷ்கா மற்றும் தேஜஸ்வினி ஆகியோர் கடந்த ஜனவரி 31-ம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் தங்களுடன் செல்போன் அல்லது ஏடிஎம் கார்டு எதையும் எடுத்துச் செல்லாமல், ஆதார் அட்டையை மட்டுமே கொண்டு சென்றதால் காவல்துறைக்குப் பின்தொடர்வது கடினமாக இருந்தது. உள்ளூர் காவல்துறையின் தீவிரத் தேடுதலுக்குப் பிறகும் பலன் கிடைக்காததால், தனிஷ்காவின் குடும்பத்தினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வுத் துறையான சிஐடிக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில், மாலே மகாதேஸ்வரா மலைப்பகுதியில் இவர்கள் கனகபுராவைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்தித்தது தெரியவந்தது. குடும்பப் பின்னணி குறித்து பொய்யானத் தகவலைக் கூறி அந்த இளைஞரின் நம்பிக்கையைப் பெற்ற தனிஷ்கா, அவரைத் திருமணமும் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தேஜஸ்வினி அவர்களுடனேயே தங்கியிருந்தார். பல மாதங்களாகக் காவல்துறைக்கு எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில், மாணவிகளின் ஆதார் விவரங்களை சிஐடி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு, தனிஷ்கா ஒரு புதிய சிம் அட்டை வாங்குவதற்காகத் தனது ஆதார் அட்டையைப் பயன்படுத்தியுள்ளார். அந்த அடையாள ஆவணம் பயன்படுத்தப்பட்ட கணத்திலேயே தொலைத்தொடர்பு நிறுவனம் மூலம் சிஐடி அதிகாரிகளுக்குத் தகவல் சென்றடைந்தது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப விசாரணையின் மூலம் மாணவிகள் இருந்த இடத்தை அதிகாரிகள் வெற்றிகரமாகக் கண்டறிந்து, இந்த நீண்ட தேடுதல் வேட்டையை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…