சேலம் அழகனூரைச் சேர்ந்த இளம் பள்ளி ஆசிரியை சண்முகப்பிரியா, தனது காதலன் கவுதமின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், தனிப்பட்ட புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கவுதம் விடுத்த மிரட்டல், ஒரு இளம் உயிரைப் பறித்துள்ளது. தனது மரணத்திற்கு கவுதமே காரணம் என சண்முகப்பிரியா உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருப்பது, அவர் அனுபவித்த மன உளைச்சலையும் பயத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
சமூக வலைதளங்களையும் தொழில்நுட்பத்தையும் தவறாகப் பயன்படுத்திப் பெண்களை அச்சுறுத்தும் இத்தகையச் செயல்கள் சமூகத்தில் பெருகி வருவது கவலைக்குரியது. ஆசிரியை சண்முகப்பிரியாவின் தாய் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காதலின் பெயரால் மிரட்டல் விடுத்து, ஒரு பெண்ணின் வாழ்வைச் சிதைத்த அந்த நபருக்குச் சட்டத்தின் முன் கடுமையானத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற சைபர் குற்றங்கள் மற்றும் மனரீதியானத் துன்புறுத்தல்களுக்கு எதிராகப் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்பதையும் இந்தத் துயரச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…