தற்போது தமிழ் சின்னத்திரையை பொருத்தவரையில் மக்களை மனம் கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறக்கூடிய நிகழ்ச்சி விவாத மேடை தான். விஜய் டிவியில் காலம் காலமாக கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வரும் நிலையில் ஜீ தமிழிலும் தமிழா தமிழா என்ற விவாத நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு ஒவ்வொரு வாரமும் விவாதம் நடைபெறும். அதன்படி கடந்த வாரங்களில் ஆண் – பெண்கள் வீட்டில் எப்படி பாசத்தை காட்டுவார்கள் என்பதை கருவாகக் கொண்டு ஒரு வாதம் நடந்து முடிந்தது.
அதில் இரண்டு பெண் குழந்தைகளின் தாயான ஒரு பெண், என்னுடைய அப்பா என்னை இதுவரை கொஞ்சியது கிடையாது. என்னுடைய குழந்தைகளையும் கொஞ்சியது இல்லை. வீட்டிற்கு சென்றால் பார்ப்பார். அதனுடன் அவர் அப்படியே இருந்து விடுவார். அப்பாவின் பாசத்தை நான் அவ்வளவாக உணர்ந்தது கிடையாது என்று கண்ணீர் மல்க அந்தப் பெண் பேசி உள்ளார். இதனை கேட்ட ஆவுடையப்பன் சற்று கவலை அடைந்தார். இப்படியும் அப்பாக்கள் இருப்பார்களா என கேட்கும் வகையில் அவருடைய கேள்விகள் அமைந்தது. தன்னுடைய கணவரிடமும் அடிக்கடி இதனை கூறியதாகவும் அந்தப் பெண் அரங்கத்தில் கூறியது அனைவரையும் கலங்க வைத்தது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள செட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (40) மற்றும் செல்வின் (35) ஆகிய இருவருக்கும்…
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி…
24 ஆண்டுகளுக்குப் பிறகு, 'பிரண்ட்ஸ்' திரைப்படம் 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவம்பர் 21ஆம் தேதி மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், சென்னையில்…
கடந்த 2021-இல் 'முகில் பேட்டை' கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். இன்று தென்னிந்திய அளவில்…
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் விவகாரத்தில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து…
கலப்பட இருமல் மருந்துகளால் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.…