தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இரண்டு மட்டங்களில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு போட்டியாக தற்போது தமிழக அரசு ரேஷன் அட்டைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் வேஷ்டி சேலை அரசு வழங்கியிருந்தது. ஆனால் சில வருடங்களாக வழங்கி வந்த ரொக்கம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 5000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிதியை திரட்டுமாறு நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பான பச்சரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி சேலையும், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்க திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசு கிடைக்கும். அடையாளத்திற்காக ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத்…
பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…