இனி வேற மாதிரி தான் டீல் பண்ணனும்…… புஸ்ஸி ஆனந்தை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்ல… அதிரடியான ஆக்ஷனில் இறங்கிய விஜய்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்த தொடக்கத்திலிருந்து பாஜக மற்றும் திமுகவை தங்கள் எதிரி என தொடர்ந்து கூறி வருகிறார். இதனிடையே சமீபத்தில் கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனிடையே சமீபத்திய கசப்பான அனுபவங்களுக்கு பிறகு விஜய் தன்னுடைய இயக்கத்தில் பெரிய மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளார். அதாவது முக்கிய நிர்வாகிகளை மாற்றுவது முதல் புதிய தலைமுறை உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது வரை பல முயற்சிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். இடி அரசியல் அரங்கில் வேறொரு விதையை மக்கள் காண கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நெருக்கடியான தருணத்தில் காணாமல் போனது விஜய்க்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் நிர்வாக அமைப்பை மீள் ஆய்வு செய்து நம்பிக்கை இழந்த நிர்வாகிகளை நீக்கவும் அல்லது அவர்களுடைய பொறுப்புக்களை குறைப்பதற்கோ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. விஜய் இனி அரசியல் முடிவுகளை நேரடியாக எடுத்துக் கொள்வார் எனவும் இளைஞர்கள் மற்றும் திறமையான நபர்கள் அடங்கிய புதிய குழுவை உருவாக்குவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அரசியலில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பின்னர் விஜய் நிதானமான, ஆனால் துணிச்சலான ஒரு நிலைப்பாட்டை தற்போது எடுத்துள்ளார்.

கூட்டணி அரசியலை தவிர்த்து தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக உள்ள விஜய் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தான் தெரிகிறது. அதனால் வரும் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடும் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. மக்கள் அளிக்கும் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய அரசியல் பயணத்தை தொடரவா அல்லது திரைத்துறைக்கு திரும்பவா என்பது குறித்து விஜய் முடிவெடுக்க உள்ளார்.

அதுவே போதுமான ஆதரவு கிடைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடுவார் எனவும் தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் இதுவரை ஒரு ரசிகர் மன்றமாக செயல்பட்ட போதும் இனி அது ஒரு அரசியல் கட்சியாக மாற வேண்டும் என விஜய் தெளிவான முடிவு எடுத்துள்ளார். இனி அவர் நேரடியாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு மக்களுடன் நெருங்கி பணியாற்றுவார் என தெரிகிறது. ஆக மொத்தத்தில் விஜயின் இந்த அதிரடியான முடிவுகள் அவருடைய அரசியல் பயணத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றே கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

கூட்டணிக்கு ஒத்துழைக்காத “அந்த கருப்பு ஆடுகள்” யார் யார்..? லிஸ்ட் எடுக்கும் விசிக தலைமை.. தேர்தல் முடிவுக்குப் பின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…

11 minutes ago

திக் திக் நிமிடங்கள்..! 85.1% வாக்குப் பதிவு.. இளைய தலைமுறை வாக்குகள் யாருக்கு..? தூக்கத்தைத் தொலைத்த அரசியல் கட்சிகள்… நாளை காத்திருக்கும் மெகா டுவிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…

16 minutes ago

திமுக மீண்டும் வென்றால்… ஸ்டாலின் போடப்போகும் ‘முதல் கையெழுத்து’ இதுதான்.. செம குஷியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

23 minutes ago

விமான நிலையத்தில் உச்சகட்ட பரபரப்பு..! ஓடும் விமானத்தில் கதவை திறந்து.. நபர் செய்த காரியத்தால் பயங்கர அதிர்ச்சி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!

சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…

28 minutes ago

தேர்தல் தோல்வி ஆத்திரம்..! கையில் வாள்களுடன் மக்களை மிரட்டிய பாஜக வேட்பாளர்… பெரும் பரபரப்பு…!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…

31 minutes ago

இனி இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாம்… வந்தது நீர் தகனம்… புதிய கண்டுபிடிப்பு..!!!

இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

35 minutes ago