தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் தங்கள் ஆட்சியை தமிழகத்தில் தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கூட்டணியை பலப்படுத்தவும் கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை மாற்றம் செய்யவும் அடுத்தடுத்து தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பாஜகவிற்கு பொது அடிமைகள் நிச்சயம் கிடைப்பார்கள். ஆனால் எத்தனை அடிமைகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் திமுகவின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை அவர்களால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
உங்களுடைய எழுச்சி, அன்பை பார்க்கையில் முழுதாக மேடை ஏறுவோமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. என்றுமே கை நம்மை விட்டுப் போகாது. நான் என் கையையும், உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் சொன்னேன் என்று கூறியுள்ளார். கை நம்மை விட்டுப் போகாது என்று கூறியதன் மூலமாக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பலத்தை துணை முதல்வர் உதயநிதி உறுதி செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கூடுதல் சிவில் நீதிபதியாகப் பணியாற்றி வந்த அமன் குமார் சர்மா, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாகத்…
பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
புதுக்கோட்டை மாவட்டம் திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், தனது நண்பர்களாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள 'உள்' விவகாரங்கள் தொடர்பாகத் தலைவர்…
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…