தைப்பொங்கலை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி முதல் இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும் என அமைச்சர் ஆர். காந்தி அறிவித்துள்ளார். அத்துடன் இந்த முறை 15 ரக சேலைகள் மற்றும் ஐந்து ரகங்களில் வேட்டிகள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக பொங்கல் பரிசு தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில் விரைவில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார். இதனால் அடுத்ததாக ரொக்க பணம் குறித்த அறிவிப்பை வெளியாகும் என தெரிகிறது.
