உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ராம் ஆசிஷ் நிஷாத் (32) என்பவருடைய தங்கை நீலம்(19). இவர்களுக்கு நிலம் கையகப்படுத்தியதில் அரசு வழங்கிய 6 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது. இந்த நிதியை இருவரும் பிரிப்பது தொடர்பாக தகராறு வந்தது. இருவருக்கும் இடையே சமீபத்தில் மீண்டும் பணத்தை பிரிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த அண்ணன் துணியால் தங்கை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு உடலை சாக்கு மூட்டையில் திணிப்பதற்காக கை கால்களை உடைத்து மூட்டையாக கட்டி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரும்பு தோட்டத்தில் உடலை வீசுவதற்காக சென்று உள்ளார்.
அப்போது வழியில் காவல்துறையினர் சோதனை செய்தபோது அவர்களிடம் சாக்கு மூட்டையில் கோதுமை இருப்பதாக கூறி தப்பி சென்றுள்ளார். இதனிடையே நீலத்தை காணாத நிலையில் குடும்பத்தினர் சத் பூஜைக்காக அவர் சென்றிருக்கலாம் என்று நினைத்துள்ளனர். மீண்டும் அவர் வராததால் அவரை தேடினர். பிறகு போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் ராம் பெரிய சாக்கு மூட்டையுடன் வீட்டை விட்டு வெளியேறியதை கண்ட ஆக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் தங்கையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கரும்பு தோட்டத்திலிருந்து அழகிய நிலையில் அந்தப் பெண்ணின் உடலை காவல்துறையினர் மீட்டனர். இதனைத் தொடர்ந்து ராமை கைது செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பணத்திற்காக சொந்த தங்கையையே அண்ணன் கொடூரமாக கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
