தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று மதியம் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் இரவை எட்டு மணி அளவில் கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த சிறிது நேரத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து மக்கள் மயங்கி விழுந்தனர். உடனே ஆம்புலன்ஸ் மூலமாக அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பத்து பேர் குழந்தைகளும் அடங்குவர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கரூர் பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செப்டம்பர் 29 நாளை மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கம் பேரவை அறிவித்துள்ளது. நாளை மாலை 6:00 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மெடிக்கல் மற்றும் பால் உள்ளிட்ட கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்றக் குழுத் தலைவராக நடிகர் விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பனையூரில் நடைபெற்ற தவெக…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (மே 5, 2026) நடைபெற்ற அக்கட்சியின் புதிய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியை உறுதி…
விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வெற்றிச் சான்றிதழைப்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல்…
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, மூன்று முக்கிய தலைவர்களுமே…