இரட்டை இலையுடன் தாமரை மலரத்தான் போகுது, நீங்க பார்க்க தான் போறீங்க.. தமிழிசை சௌந்தர்ராஜன் பன்ச்..!

By Nanthini on ஆடி 10, 2025

Spread the love

வட்ட இலையுடன் தாமரை குளத்தில் மலரும், இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும் என தமிழ் இசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணன் எடப்பாடி மக்களை காப்போம் நிகழ்ச்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை காப்போம் என்ற ஊர்வலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. திமுக அதைப் பார்த்து பயந்து இருக்கிறது. நிச்சயம் தமிழகம் காக்கப்படும்.

பாஜக சார்பில் தனியாகவும் பிரச்சாரத்தை மேற்கொள்வோம். அண்ணன் எடப்பாடி யார் கூட்டணி கட்சிகளின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். நம் நாடு நன்றாக இருக்கிறது. எல்லா இடத்திலும் மோடிக்காக பூஜை செய்வேன். மோடி அரசு தமிழகத்திற்கு வரவேண்டும். அப்போதுதான் தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள். வட்ட இலையுடன் குளத்தில் தாமரை மலரும். இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.