தமிழ் வில்லன் நடிகர் காலமானார்… குவியும் அஞ்சலி… திரையுலகை உலுக்கிய சோகம்…!

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

திரைப்பட உலகில் தனது மிரட்டலான வில்லன் நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் (74), இரத்தப் புற்றுநோய் காரணமாக மும்பையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘தொட்டி ஜெயா’ திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான இவர், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழின் உச்சத்தை அடைந்தார். குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளியான ‘கஜினி’ திரைப்படத்தில் இவர் ஏற்ற ‘கஜினி தர்மாத்மா’ என்ற இரட்டை வேட வில்லன் கதாபாத்திரம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் பிரதீப் ராவத் நடித்துள்ளார். பாலிவுட்டில் ஆமிர் கானின் ‘லகான்’ மற்றும் இந்தி பதிப்பான ‘கஜினி’ ஆகியவற்றிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார். இவரது மறைவுச் செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த நடிகர் பிரதீப் ராவத்தின் மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.