பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையை பொருத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மாதம் தோறும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஜூன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 14 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, அங்கீகாராஜ் ஆற்றல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அரசு அறிவித்துள்ளது.
