தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் “ப”வடிவில் மாணவர்களுக்கான இருக்கைகள் அமைக்க வேண்டும் என்று அரசு புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்ற நிலையை போக்கும் விதமாகவும் வகுப்பறையில் ஆசிரியர் மற்றும் பலகையை அனைத்து மாணவர்களும் எளிதில் காணும் வகையிலும் ப வடிவில் இருக்கைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் மற்றும் ஒழுக்கம் மேம்படும் என அரசு தெரிவித்துள்ளது.
