இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களின் ரீல்ஸ் மோகம் அதிகமாகிவிட்டது. இதனால் ஏராளமான விபரீதங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் சடாரா மாவட்டத்தில் ரீல்ஸ் மோகத்தில் காரை தாறுமாறாக ஓட்டி ஸ்டண்ட் செய்த கல்லூரி மாணவர் ஒருவர் சுமார் 300 அடி பள்ளத்தில் காரோடு விழுந்துள்ளார் .
View this post on Instagram
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் 300 பள்ளத்தில் விழுந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக காயங்களோட உயிர் தப்பியுள்ளார். தற்போது அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
