ரீல்ஸ் மோகம்.. 300 அடி பள்ளத்தில் காருடன் விழுந்த கல்லூரி மாணவன்… பிறகு நடந்த அதிசயம்.. வைரலாகும் வீடியோ…!

By Nanthini on ஆடி 12, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி மாணவன் ரீல்ஸ் மோகத்தில் காரை தாறுமாறாக ஓட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் சடாரா மாவட்டத்தில் ரீல்ஸ் மோகத்தில் காரை தாறுமாறாக ஓட்டி ஸ்டண்ட் செய்த கல்லூரி மாணவன் சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் காருடன் விழுந்த நிலையில் அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அதிசயம் என்னவென்றால் 300 அடி பள்ளத்தில் விழுந்த அந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்றைய காலத்து இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தால் பல ஆபத்தான விஷயங்களை செய்வது வாடிக்கையாகி விட்டது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

The Free Press Journal பதிவைப் பகிர்ந்துள்ளார் (@freepressjournal)