தமிழக பாஜக இளைஞரணி மாநில துணைத்தலைவர் அமர்நாத் யோகேஸ்வரன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பாஜக மேலிடம் வழங்கிய பண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் சொந்த கட்சி நிர்வாகியின் வீட்டை அமர்நாத் தூண்டுதலின் பேரில் சிலர் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது
