#image_title
பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சகாய பிரகிடா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா, குட்டிப்புலி தினேஷ் குமார், சத்யா தேவி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கோழிப்பண்ணை செல்லதுரை படத்திற்கு என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி கோழி பண்ணை செல்லதுரை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் 22- வது சர்வதேச திரைப்பட விழாவில் வருகிற செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 24 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லாந்து பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுதான். வருகிற 18-ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோழி பண்ணை செல்லதுரை திரைப்படம் வேர்ல்ட் பிரிமியர் அந்தஸ்தில் திரையிடப்பட உள்ளது.
திரையரங்குகளுக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே புகழ் அமெரிக்காவில் புகழ்வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரை படம் திரையிடப்படுவது பெருமையாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்த் கூறியிருக்கிறார். இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…
"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…