தமிழ்நாட்டின் ஐந்திணைகளின் பெருமைகளையும் அழகிகளையும் அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலையும் அவர்களுடைய மொழியை தமது செல்லுலாய் கண்களால் காட்சிப்படுத்தியவர் தான் இயக்குனர் சிகரம் பாரதிராஜா. சினிமா செட்டுக்குள் பார்த்துப் பார்த்து வறண்டு போன கண்களுக்கு கிராமத்து வீடுகளுக்குள் புகுந்து இயற்கை அழகை கேமராவில் புகுத்தி என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா என்ற அந்த கம்பீரமான குரல் தமிழர்கள் அனைவரும் ஒரே குலம் என்பதை நினைவூட்டும். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா தன்னுடைய இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படம் மூலமாக தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை அறிமுகப்படுத்தினார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து மனோஜ் பாரதிராஜா வருஷம் எல்லாம் வசந்தம், சமுத்திரம் மற்றும் ஈர நில உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த எந்த திரைப்படமும் அவருக்கு பெயரை பெற்று தரவில்லை. இதனால் சில காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த மனோஜ் பாரதிராஜா சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு நடிப்பு கை கொடுக்கவில்லை என்பதால் சோர்வு அடையாமல் வெளிநாட்டுக்குச் சென்று இயக்குனருக்கான பிரத்தியேகமான பயிற்சியை பயின்று இயக்குனராக அவதாரம் எடுத்த மனோஜ் பாரதிராஜா மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
கிராமத்து காதலை ரசித்து சித்தரித்த அளவில்லா காதல் திரைப்படங்களை கொடுத்த ஜாம்பவான் பாரதிராஜாவின் மகன் என்பதை தன்னுடைய முதல் படத்திலேயே கையாண்டு ஒரு அழகான அழுத்தமான காதல் கதையை கொடுத்தார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும் நடித்திருந்தார். இதனிடையே மனோஜ் பாரதிராஜா நடிகை நந்தனாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா திடீர் மாரடைப்பு காரணமாக சற்று முன் காலமானார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினர் மற்றும் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'தாய் கிழவி' திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ரேச்சல் ரெபெக்கா, தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான…
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இன்றும் நாளையும் மற்றும் தேர்தல் நாளன்றும் என மொத்தம்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நாட்டுடனான விவகாரத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இன்றைக்குள் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்…
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் வேண்டுமென்றே…
பெங்களூருவில் உள்ள தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பிரேர்ணா (27) என்ற பெண், அதே கடையில் தன்னுடன் பணிபுரிந்து வந்த…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…