பகீர்..! “வா உனக்கு ஒரு சர்பிரைஸ்” ஆசையாக அழைத்து சென்ற காதலி.. கண்ணைக் கட்டி காதலனை உயிரோடு எரித்த கொடூரம்.. பெங்களூர் நடுங்கிப்போச்சு..!!

Spread the love

பெங்களூருவில் உள்ள தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பிரேர்ணா (27) என்ற பெண், அதே கடையில் தன்னுடன் பணிபுரிந்து வந்த கிரண் என்பவரை ஒரு வருடத்திற்கு மேலாகக் காதலித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக கிரண் தன்னை முறையாகக் கவனிக்கவில்லை என்றும், தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்றும் பிரேர்ணா சந்தேகமடைந்துள்ளார். தன்னை அவர் புறக்கணிப்பதாகக் கருதிய பிரேர்ணா, கிரணுக்குப் பாடம் புகட்ட ஒரு பயங்கரமான முடிவை எடுத்தார்.

திட்டமிட்டபடி, கிரணைத் தனது வீட்டிற்கு வரவழைத்த பிரேர்ணா, அவருக்கு ஒரு வித்தியாசமான முறையில் ‘ப்ரோபோஸ்’ (Propose) செய்யப் போவதாகக் கூறி நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய கிரணின் கண்களைத் துணியால் கட்டி, அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து கைகளையும் சேர்த்து கட்டியுள்ளார். கிரண் நிலைகுலைந்து அமர்ந்திருந்த வேளையில், திடீரென அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

இந்தக் கொடூரச் செயலைச் செய்ததோடு நிறுத்தாமல், கிரண் தீயில் கருகி உயிரிழப்பதைப் பிரேர்ணா தனது செல்போன் கேமராவில் வீடியோவாகப் பதிவு செய்து பார்த்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கிரணின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேர்ணாவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

6 minutes ago

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

16 minutes ago

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

36 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

49 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

50 minutes ago