தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
அதே போல அவரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திய திரைப்படம் என்றால் அது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி திரைப்படம்தான். அந்த படம்தான் முதல் முதலில் விஜய் நடித்ததில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் விஜய்யின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்று இன்று இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார்.
விஜய் தற்போது நடித்துவரும் ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகி, முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் பலரும் விஜய் சென்றுவிட்டால் அவரின் இடம் வெற்றிடமாகிவிடும் என புலம்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிங்கம்புலி இதுபற்றி பேசுகையில் “யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சினிமா இயங்கிக் கொண்டுதான் இருக்கும். யாராவது சினிமாவை நான் வென்றுவிட்டேன் என்று சொன்னால் அவர்கள் சினிமா தெரியாமல் பேசுகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒருவர் சென்றால் மற்றொருவர் அந்த இடத்துக்கு வந்துவிடுவார். அதனால் சினிமாவில் வெற்றிடம் என்பது கிடையாது” எனக் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…