CINEMA
இந்த சீனெல்லாம் இங்க வேண்டாம்… ஏமாத்திட்டு போன காசை ஒத்த பைசா இல்லாம திருப்பி கொடுக்கணும்… சமுத்திரக்கனியின் பதிவால் கதிகலங்கி போன சூர்யாவின் குடும்பம்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவர் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை பல வருடங்களாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் இடையே இன்றும் தொடர்ந்து வருகிறது .
இவர்களின் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் தான் உள்ளது. இந்நிலையில் திடீரென இதில் திரை பிரபலங்கள் குறுக்கிட்டு இயக்குனர் அமீருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முக்கியமாக இத்திரைப்படத்தில் நடித்த கலைஞர்கள் ஒவ்வொருவரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .ஏனென்றால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டியில் அவ்வளவு தரக்குறைவாக இயக்குனர் அமீரை பேசி இருந்தார்.
இதனால் தற்பொழுது பிரபலங்கள் ஒவ்வொருவராக பொங்கி எழுந்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஞானவேல் ராஜா தான் பேசியதில் தவறு இருந்தால் மன்னித்து விடுமாறு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்பொழுது இதனை பார்த்த நடிகர் சமுத்திரக்கனி பொங்கி எழுந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘பிரதர்.. இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்கு செல்லாது. நீங்க செய்ய வேண்டியது எந்த பொதுவெளியில எகத்தாளமாக உட்கார்ந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்றை வாரி இறைச்சீங்களோ, அதே பொதுவெளியில பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும். நீங்க கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இன்டர்வியூவா சமூக வலைத்தளங்களில் இருந்து தொடச்சி தூர எரியணும்.
அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாமல் திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடன் வாங்கின நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் பருத்திவீரன் திரைப்படத்தில் வேலை பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. அவர்கள் எல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவங்க. நீங்கதான் அம்பானி ஃபேமிலியாச்சே. காலம் கடந்த நீதி. மறுக்கப்பட்ட நீதி’ என்று கொந்தளித்துள்ளார் சமுத்திரக்கனி. இவ்வளவு நடந்தும் நடிகர் கார்த்தி வாய் திறக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்பொழுது நடிகர் சூர்யாவின் குடும்பமும் இப்பதிவினை பார்த்து கதிகலங்கி போயுள்ளனர். இதோ அந்த பதிவு…
அறம் வெல்லும்… வெல்வோம் pic.twitter.com/0NiNIomJTx
— P.samuthirakani (@thondankani) November 30, 2023