#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் பழம்பெறும் மூத்த நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகன் ஆவார். இவரது சகோதரர் கார்த்தியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் சூர்யா.
1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சூர்யா. தனது இரண்டாவது படமான நந்தா திரைப்படத்தின் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து காக்க காக்க பிதாமகன் வாரணம் ஆயிரம் ஏழாம் அறிவு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஆனார்.
தொடர்ந்து சிங்கம் படத்தொடர் ஜெய் பீம் சூரரைப் போற்று போன்ற நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்திருக்கிறார் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி இருக்கும் கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பிஸியாக இருந்து வரும் சூர்யா ஒரு நேர்காணலில் அவர் நடித்த ஜெய் பீம் படத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் ஜெய்பீம். இந்த திரைப்படத்தை பற்றி சூர்யா கூறுகையில் என்னுடைய ஜெய் பீம் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகாமல் இருக்கலாம் ஆனால் அந்த படத்தின் மூலமாக நாங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வால் தமிழ்நாட்டில் மூன்று லட்சம் மக்கள் பயனடைந்து இருக்கிறார்கள். அதுவே எங்களுக்கு போதுமானது திருப்தியாக இருக்கிறது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் சூர்யா.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…