மருத்துவமனையில் இதுதான் நடந்தது.. அஜித்தின் உடல் நிலையை குறித்து உண்மையை உடைத்த மேனேஜர் சுரேஷ் சந்திரா..

By Ranjith Kumar on பங்குனி 9, 2024

Spread the love

மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் அஜித் திரிஷா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் விடமுயற்சி. இப்படம் ஒரு வருட காலமாகவே சில பல பிரச்சினைகள் ஏற்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதில் லைக்கா நிறுவனத்தின் போதிய வருமானம் இல்லாததால் இப்படத்தை சிறிது காலம் தள்ளி வைத்திருந்தார்கள்.

சமீப காலமாக லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியாகும் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவியது, அதனால் தயாரிப்பு நிறுவனத்தில் போதிய வருமானம் கிடைக்காமல் பல பெரிய படங்களை சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தார்கள். சங்கர் மற்றும் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்திற்கான தயாரிப்பை லைக்கா நிறுவனம் தான் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக உள்ளதால் லைக்காவுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து அப்படத்தை இயக்கி வருகிறார்கள். அந்த நிலைமைக்கு லைக்கா சென்றுவிட்டது. விடாமுயற்சி படம் தள்ளி வைப்பதற்கு காரணமே இதான்.

   

அந்த சமயத்தில் தான் கால இடைவெளி அதிகமாக உள்ளதால் மீண்டும் உலக சுற்றுலா செல்வோம் என்று அஜித் துபாயில் உள்ள தன் பைக்கை தயார் செய்ய சொல்லி இருந்தார், அவ்வப்போது தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தன் மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்தார்கள், என்றும் அதற்காக மதுரை, கேரளா போன்ற முக்கிய இடங்களில் உள்ள கைதேர்ந்த மருத்துவர்களை அழைத்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் இது அனைத்தும் பொய்யான தகவல் ஆகும் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். வழக்கம்போல் அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு சென்று இருந்தார் அஜித். அந்த சமயத்தில் தனது காதுக்கு கீழ் உள்ள நரம்பு ஒன்று வீக்கம் அதிகமாக இருந்ததால், அதை அரை மணி நேரம் சிகிச்சை செய்து அந்த வீக்கத்தை சரி செய்து உள்ளார்கள்.

   

அதனால் மருத்துவர்கள் மருத்துவமனையில் ஓய்வெடுத்துச் செல்லுங்கள் என்று அஜித்திடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். சிகிச்சை அறையில் இருந்து இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதுதான் நடந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அஜித்துக்கு பல மாத காலமாக மூளையில் கட்டியுள்ளதால், அவர் பல வேதனைகளை அனுபவத்தி வந்தார், தற்போது அதை நீக்கப்பட்டது என்று, பல வதந்திகள் பரவி வந்தன. அது எல்லாம் பொய் என்று அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.