தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்று பணியாற்றி வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் உள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக மாறி உள்ளது.
இதனிடையே சமீபத்தில் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது மிகப்பெரிய சிக்கலாக விஜய்க்கு மாறியுள்ளதால் சட்டரீதியாக கையாண்டு வருகிறார். அதேசமயம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் விஜய் மக்களை சந்திப்பதற்கும் அனுமதி கேட்டுள்ளார்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் பலி விவாகரத்தில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்பதை தமிழக வெற்றி கழகம் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்று தீர்ப்பு வெளியான பிறகே விஜயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…