மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேதார் குர்ஜார் என்ற இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது, அங்கு பணியிலிருந்த செவிலியர் அதிகாரி ரச்சனா சோனி என்பவர் திடீரென ஆத்திரமடைந்து, அந்த வாலிபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோதலின் போது, “என்னை சாதாரண ஆள் என நினைத்தாயா? நான் உள்ளூர் ஆள் தான். 100 பேரை வரவழைத்து உன்னை அடி வெளுக்கச் செய்வேன்” என அந்த வாலிபரை செவிலியர் அதிகாரி மிரட்டியுள்ளார். சிகிச்சைக்காக வந்த நோயாளியிடம் மனிதாபிமானமின்றி, அடியாட்களை வைத்து மிரட்டல் விடுத்த செவிலியரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படி ரவுடித்தனமாகப் பேசுவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…